கோவையில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்க மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

கோவை பன்னீர்மடை அருகே உள்ள டார்சா ரெசார்ட்டில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 19வது ஆண்டு மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் ஆய்வக உபகரணங்கள் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை பன்னீர்மடை அருகே உள்ள டார்சா ரெசார்ட்டில் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநில அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் ஆய்வக உபகரணங்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆய்வக விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநில அளவிலான கருத்தரங்கம் இது 19வது ஆண்டாக நடைபெறுகிறது.



கோவையில் இது மூன்றாவது முறையாக நடத்தப்படுகிறது. ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.



முதல் நாள் கருத்தரங்கில், இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வகமான மைக்ரோ பயோலாஜிக்கல் லேப் மணி, பி.எஸ்.ஜி. மெடிக்கல் கல்லூரி முதல்வர் சுப்பாராவ் மற்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் சிறப்புற வளர வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



கண்காட்சியை கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



25க்கும் மேற்பட்ட ஆய்வக விநியோகஸ்த நிறுவனங்களின் ஸ்டால்களில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஆய்வக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் ஆய்வக விநியோகஸ்தர்கள் தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்தி, கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மாநில அளவிலான ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. மேலும், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கோவை ஆய்வக விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் நரேந்திரகுமார், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் அறிவுநந்தன் ஆகியோர் இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...