பல்லடத்தில் 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க திட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் வேதனை

பல்லடத்தில் அங்காளம்மன் கோயில் நிலத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான மாணிக்கபுரம் சாலையில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை மீட்க அங்காளம்மன் கோயில் குழுவினர் இந்து அறநிலைத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வருவாய்த்துறை, இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ஆனால், இந்து சமய அறநிலைத்துறையின் ஆய்வாளர் பேச்சுவார்த்தைக்கு வராததால், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இப்பகுதியில் வசிக்கும் சுமார் 120க்கும் மேற்பட்டோரின் வீடுகள் இடிக்கப்படும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தனர்.



மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலும், வீடுகளை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் தங்களின் நிலை மிகவும் துயரமாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...