மடத்துக்குளத்தில் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கொடியேற்று விழா

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், தொல். திருமாவளவன் அவர்களின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



மடத்துக்குளம் பெரியவட்டாரம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மடத்துக்குளம் பேரூர் செயலாளர் சீட் கவர் சேகர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த.சதீஷ்குமார் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டிபாபு, அரசு போக்குவரத்து கழகம் எல்எல்எப் மாநில துணைத்தலைவர் சி டி சி சத்தியமூர்த்தி, உடுமலை இப்ராஹீம் அலி, மடத்துக்குளம் முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் தமிழரசன், கடத்தூர் புதூர் முகாம் துணைச் செயலாளர் பிரபு, மடத்துக்குளம் பிலவேந்தன் கணியூர் பேரூர் செயலாளர் ஜெயபிரகாஷ், பொருளாளர் தங்கவேல் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில், கண்ணாடிப்புத்தூர், பெரிய வட்டாரம், கழுகரை உள்ளிட்ட பல பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார். இந்நிகழ்விலும் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...