வால்பாறையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதியளித்தார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வால்பாறை பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வருகை புரிந்தார்.



வால்பாறையில் உள்ள அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், பகுதி வழியாக வால்பாறை, கருமலை, பச்சமலை, அக்காமலை, மூவிஸ், சோலையார், பண்ணி மேடு சைக்கிள் முடி, போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேல் திமுகவிற்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்துள்ளதாகவும், வால்பாறை மேல் தொகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேல் வாக்கு அளித்ததாகவும் ஈஸ்வரசாமி தெரிவித்தார்.

வால்பாறை பகுதியில் உள்ள பிரச்சினைகள், தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, மாற்று தொழில் மற்றும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதியளித்தார்.

வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர், மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...