கோவை குழந்தைக்கு ரூ.16 கோடி மருத்துவ செலவு: அரசு உதவி கோரி அமைச்சர்களை சந்தித்த பெற்றோர்

கோவை சிந்தாமணி புதூரைச் சேர்ந்த சுரேஷ் தம்பதியினரின் குழந்தைக்கு ரூ.16 கோடி மருத்துவ செலவு தேவைப்படுவதால், அரசின் உதவியை நாடி அமைச்சர்களை சந்தித்துள்ளனர். இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை சிந்தாமணி புதூரைச் சேர்ந்த சுரேஷ் தம்பதியினரின் குழந்தைக்கு மருத்துவ செலவுக்காக ரூ.16 கோடி தேவைப்படுவதால், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பொதுமக்களிடமிருந்து முடிந்தவரை உதவிகள் கிடைத்தாலும், அது போதுமானதாக இல்லை.

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் R.முத்தரசன் அவர்களை கடந்த 21.08.2024 அன்று நேரில் சந்தித்து பேசினர். இதையடுத்து, முத்தரசன் சுகாதார அமைச்சரை 24.08.2024 அன்று நேரில் சந்தித்து விவரங்களைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர், குழந்தையை அழைத்து வந்து முழுமையாகப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.



இதே போல், இன்று கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சரையும் குழந்தையின் பெற்றோர் நேரில் சந்தித்துள்ளனர். மாவட்டப் பொறுப்பு அமைச்சர், இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு முழுமையாக ஒத்துழைத்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர். அரசின் உதவியுடன் குழந்தைக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...