கோவையில் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள்: 1000 பேருக்கு அன்னதானம், 100 பேருக்கு தென்னங்கன்றுகள்

கோவை அசோகபுரத்தில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 1000 பேருக்கு அன்னதானம், 100 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. கட்சி கொடியேற்றம், உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் நான்கு ரோடு பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பில் தேமுதிக கட்சி நிறுவனரும், திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சண்முகவடிவேல் தலைமையேற்று, விஜயகாந்தின் உருவப்படத்திற்கு கற்பூரம் ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், 35 அடி உயர கொடிக்கம்பத்தில் தேமுதிக கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் "கேப்டன் புகழ் ஓங்குக" என முழக்கமிட்டனர்.



விழாவின் ஒரு பகுதியாக, 100 பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட செயலாளர் சண்முக பாண்டியன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் சக்கையன் ஆகியோர் வழங்கினர். மேலும், சுமார் 1000 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதேபோல், என்.ஜி.ஜி.ஓ காலனி கேட், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்கையா மேற்கொண்டிருந்தார். இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் வடமதுரை முருகன், சஹூல் அமிது, தங்கதுரை, ஆறுமுகம், விமல்பாலாஜி, சுலைமான், அஜீத், ரமேஷ், பாக்கியராஜ், போனஸ் பாபு, திங்கலூர் பாபு, தனபால், துடியலூர் ரமேஷ், சுடலைமுத்து, கணேஷன், விஜயகுமார், பாலாஜி, சிவா, ஆட்டோ ஆறுமுகம், லட்சுமணன், துரை, சிவமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...