கோவையில் அரசு விடுமுறை அன்று இயங்கிய பள்ளி - மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவால் மாணவர்கள் உற்சாகத்துடன் வீடு திரும்பினர்

கோவையில் கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாளில் இயங்கிய CBSE பள்ளி, மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவுக்குப் பிறகு மதியம் விடுமுறை அறிவித்தது. மாணவர்கள் உற்சாகத்துடன் வீடு திரும்பினர்.



Coimbatore: கோவையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொது விடுமுறையை மீறி இயங்கிய ஒரு பள்ளி, மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவுக்குப் பிறகு மதியம் விடுமுறை அளித்தது.

புளியகுளம் பகுதியில் உள்ள வித்யா நிகேதன் என்ற CBSE பாடத்திட்டப் பள்ளி இன்று காலை முதல் இயங்கியது. LKG மற்றும் UKG மாணவர்களுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளி சீருடையில் வந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.



இந்த விவகாரம் மாவட்ட கல்வி அலுவலரின் கவனத்திற்கு சென்றதும், உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மதியம் 12 மணிக்கு விடுமுறை அறிவித்தது. பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் இந்த தகவல் அனுப்பப்பட்டது.

மதியம் எதிர்பாராத விடுமுறை கிடைத்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். அரசு விடுமுறை நாளில் பள்ளி இயங்கியது குறித்து பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

பள்ளி நிர்வாகம் கூறுகையில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களுக்காகவே பள்ளி திறந்திருந்ததாகவும், மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவைப் பெற்றவுடன் உடனடியாக விடுமுறை அறிவித்ததாகவும் தெரிவித்தனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...