உடுமலை வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்த 12 பேருக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

உடுமலை வனப்பகுதியில் முறையான அனுமதியின்றி நுழைந்த 12 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். மலைவாழ் மக்கள் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் கள்ளச்சாராயப் பிரச்சினை தொடர்ந்து நிலவி வருவதால், காட்டுப்பட்டி, மாவடப்பு, குழிப்பட்டி மற்றும் குருமலை குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் தொடர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன், மாவடப்பு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க வந்த சென்னையைச் சேர்ந்த நான்கு பேரும், திருமூர்த்திமலை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மூன்று பேரும் வனத்துறையின் முன் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேருக்கும் தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.1,40,000 அபராதம் விதிக்கப்பட்டது.



இதேபோல், அதே பகுதிக்கு மாடுகள் வாங்கச் சென்ற உடுமலை தாலுகா ராவணாபுரம் மற்றும் தேவனூர்புதூரைச் சேர்ந்த ஐந்து பேரும் வனத்துறை அனுமதியின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்தது. இவர்களுக்கும் தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.1,00,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மொத்தம் 12 நபர்களுக்கு ரூ.2,40,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் மாவடப்பு மற்றும் காட்டுப்பட்டி குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மலைவாழ் குடியிருப்புகளுக்கு வனத்துறையின் முன் அனுமதியின்றி வெளிநபர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...