மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையில் இளம்பெண் கொடூரமாக கொலை: போலீஸ் தீவிர விசாரணை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கை, கால், வாய் கட்டப்பட்டு நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் மடத்துக்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் கிடந்தது.



உடனடியாக பிணத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொல்லப்பட்ட பெண் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காணும் வகையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன் தெரிவிக்கப்படும்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...