உடுமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா: 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 6-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு நடனமாடி, பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 6-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.



தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கலந்து கொண்டனர்.



குழந்தைகள் கிருஷ்ணர் பாடல்களுக்கு நடனமாடியதோடு, பக்தி பாடல்களையும் பாடி அனைவரையும் கவர்ந்தனர்.



விழாவின் முக்கிய நிகழ்வாக உரியடித்தல் போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்று உரியடித்தனர்.

இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக பொது செயலாளர் வடுகநாதன், இளைஞர் அணி பாலகுரு, இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல், விஸ்வ ஹிந்து பரிஷத் உடுமலை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகளின் கலகலப்பான பங்கேற்பால் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...