பல்லடம் அருகே மதுபோதையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநரை சிறைபிடித்த பொதுமக்கள்

பல்லடம் அருகே பெங்களூர் செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் அவரை சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். டி.எஸ்.பி. விஜிகுமார் விசாரணை மேற்கொண்டார்.



Coimbatore: பல்லடம் அருகே தனியார் பேருந்தை மதுபோதையில் ஓட்டி வந்த ஓட்டுநரை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை அடைந்தபோது, பேருந்து தாறுமாறாக ஓடியதை கவனித்த பொதுமக்கள், பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை பரிசோதித்தனர்.



ஓட்டுநரிடமிருந்து ஜூஸ் பாட்டிலில் மதுவை கலந்து வைத்திருந்ததை கண்டுபிடித்த பொதுமக்கள், உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஓட்டுநர் வெங்கடாசலபதி (32) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்கு வந்த பல்லடம் டி.எஸ்.பி. விஜிகுமார், மது போதையில் வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டால், ஓட்டுநரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார். பின்னர், ஓட்டுநர் வெங்கடாசலபதிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, பாதி வழியில் நின்றுவிட்ட பயணிகளுக்கு போலீசார் மாற்று ஓட்டுநரை ஏற்பாடு செய்து, பயணத்தை தொடர அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...