பல்லடம் அருகே மதுபோதையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநரை சிறைபிடித்த பொதுமக்கள்

பல்லடம் அருகே பெங்களூர் செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் அவரை சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். டி.எஸ்.பி. விஜிகுமார் விசாரணை மேற்கொண்டார்.



Coimbatore: பல்லடம் அருகே தனியார் பேருந்தை மதுபோதையில் ஓட்டி வந்த ஓட்டுநரை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை அடைந்தபோது, பேருந்து தாறுமாறாக ஓடியதை கவனித்த பொதுமக்கள், பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை பரிசோதித்தனர்.



ஓட்டுநரிடமிருந்து ஜூஸ் பாட்டிலில் மதுவை கலந்து வைத்திருந்ததை கண்டுபிடித்த பொதுமக்கள், உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஓட்டுநர் வெங்கடாசலபதி (32) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்கு வந்த பல்லடம் டி.எஸ்.பி. விஜிகுமார், மது போதையில் வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டால், ஓட்டுநரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார். பின்னர், ஓட்டுநர் வெங்கடாசலபதிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, பாதி வழியில் நின்றுவிட்ட பயணிகளுக்கு போலீசார் மாற்று ஓட்டுநரை ஏற்பாடு செய்து, பயணத்தை தொடர அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...