துடியலூர் அரிமா சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன

கோவை துடியலூர் அருகே பழனிக்கவுண்டன்புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு துடியலூர் அரிமா சங்கம் சார்பில் சீருடைகள், எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. சங்கத் தலைவர் பள்ளி மேம்பாட்டுக்கு உறுதியளித்தார்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள பழனிக்கவுண்டன்புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு துடியலூர் அரிமா சங்கம் சார்பில் சீருடைகள் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கோவை துடியலூர் அரிமா சங்கத்தின் 2024-25ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்ற நிலையில், சமூக சேவை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து அனைவரையும் வரவேற்றார். அரிமா சங்கத் தலைவர் பி.பி.ஆறுச்சாமி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் பேசிய அரிமா சங்கத் தலைவர் ஆறுச்சாமி, பள்ளியின் சுற்றுச் சுவரை விரைவில் சீரமைத்துத் தருவதாகவும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு சீருடைகள், பேனா, பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த உதவிப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30,000 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் செயலாளர் நித்தியானந்தம், பொருளாளர் ஆறுமுகம், பட்டயத்தலைவர் ஏ.வி.முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அரிமா சங்க முன்னாள் தலைவர்களான ராம மூர்த்தி, அய்யாசாமி, சுந்தர்ராஜ், தம்பு நாயக்கர் மற்றும் உறுப்பினர்களான ராஜா, சர்குணம், குமார், மகேஷ், முத்துவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர் ஸ்மைலின் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...