தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி காவல் ஆணையரிடம் மனு

திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, கட்சி நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டினர்.



Coimbatore: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி தராமல் தங்களை அலைக்கழிப்பதாக கூறி, அக்கட்சியின் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, உரிய அனுமதி பெற்று கட்சிக் கொடியை பறக்க விடுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், திருப்பூர் பகுதிகளில் கொடிக்கம்பம் அமைத்து கட்சிக் கொடியினை ஏற்றிட காவல்துறையினர் தடை விதிப்பதாக கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.



மேலும், அனுமதி பெற மாநகராட்சி நிர்வாகத்தை அணுகினால் காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு அனுப்பி விடுவதாகவும், காவல்துறையினரிடம் அணுகினால் மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என கூறி தங்களை அலைக்கழிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க முடிவெடுத்ததாக கூறிய அவர்கள், முதல் கட்டமாக மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான குதுப்தீன், இது தொடர்பாக அளித்த பேட்டியில், தங்களது கட்சிக்கு உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், அதிகாரிகளின் அலைக்கழிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...