டாக்டர் தவமணி தேவி பழனிசாமிக்கு எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர் விருது 2024

கோவையில் நடைபெற்ற பிரிட்ஜ்24 நிகழ்ச்சியில் டாக்டர் தவமணி தேவி பழனிசாமிக்கு கல்வித் துறைக்கான சிறப்பான சேவைக்காக எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர் விருது வழங்கப்பட்டது. அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் விருதை வழங்கினார்.


கோவை: கேஎம்சிஹெச் மருத்துவமனையின் துணைத்தலைவரும், டாக்டர் என்ஜிபி கல்வி நிறுவனங்களின் செயலாளருமான டாக்டர் தவமணி தேவி பழனிசாமிக்கு சிறப்பான கல்வி சேவைக்கான எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர் விருது 2024 வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் தவமணி பழனிசாமி அவர்கள் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனையின் துணை தலைவராகவும், டாக்டர் என்ஜிபி கல்வி நிறுவனங்களின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். 1990-ம் ஆண்டு துவக்கப்பட்ட டாக்டர் என்ஜிபி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் மூலம், குழந்தைகள் மற்றும் பருவ வயதினருக்கான சிறப்பு மருத்துவராகவும் சேவையாற்றி வருகிறார்.

மருத்துவத் துறையில் அவரது நீண்ட அனுபவம், உலகத்தரமான வசதிகளுடன் தரமான கல்வி அளிப்பதற்காக பல்வேறு கல்வி நிறுவனங்களை துவக்க ஊக்கமளித்தது. தற்போது மருத்துவ அறிவியல், கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி, சிபிஎஸ்ஈ பள்ளி என 10 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 15,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி அவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக, ஐசிடி அகாடமி (ICT Academy) சார்பாக எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஆதரவுடன், ஐசிடி அகாடமி நடத்திய பிரிட்ஜ்24 (BRIDGE 24) நிகழ்ச்சி கடந்த 20-ம் தேதி கோவை ஹோட்டல் லீ மெரியடினில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் டாக்டர் தவமணி தேவி பழனிசாமிக்கு இவ்விருதை வழங்கினார்.

இந்த விருது பற்றி கருத்து தெரிவித்த டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, "இந்த விருது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் கல்லூரிகளில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மாணவர்களுக்கு சென்றடையும் வகையில் உள்கட்டமைப்புகள் உள்ளன. இத்தகைய விருதுகள் கல்வித்தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்யவும் தூண்டுகோலாக அமையும்" என்று கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...