நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பில் கோவை ஏஜேகே கல்லூரி முதலிடம்

கோவையில் பாரதியார் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு அளிப்பதில் முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 766 கல்லூரிகளில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தில் வேலைவாய்ப்பு அளிப்பதில் கோவையில் பாரதியார் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

கோவை நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழக அரசின் நான் முதல்வன் மதிப்புமிக்க திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தில் வேலைவாய்ப்பு அளிப்பதில் தமிழ்நாட்டில் உள்ள 766 கல்லூரிகளில் நான்காவது இடத்தையும் கோவை பாரதியார் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கல்லூரிகளில் முதலிடத்தையும் அடைந்து குறிப்பிடத்தக்க சாதனையை பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட நான்முதல்வன் திட்டம் திறன் மேம்பாடு மூலம் மாணவர்களுக்கு மதிப்புமிக்க வேலை வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாடுக்கழத்தின் நான் முதல்வன் அனைத்து கல்வி நிறுவன தலைவர்களுடன் மாநில அளவிலான கருத்தரங்கம் 29.8.2024 அன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா IAS அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நான் முதல்வன் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தில் வேலைவாய்ப்பு அளிப்பதில் கோவையில் ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வேலை வாய்ப்புகளை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத முயற்சியைப் பாராட்டி இன்னசென்ட் திவ்யா IAS அவர்கள் சாதனைச்சான்றிதழை வழங்கினார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...