கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரம்: 5 இன்ச் முதல் 10 அடி வரை சிலைகள் தயார்

விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், கோவையில் 5 இன்ச் முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் நட்பு பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த சிலைகள் பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன.



கோவை: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலை தயாரிப்பாளர்கள் வேகமாக பணியாற்றி வருகின்றனர்.



மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்பதால், 5 இன்ச் முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் களிமண் மற்றும் காகிதக்கூழ் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.



இந்த ஆண்டு பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.



மச்ச விநாயகர், சிம்ம விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயருடன் கூடிய விநாயகர், Bike விநாயகர், கங்காருவுடன் கூடிய விநாயகர் என பல்வேறு வகையான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு டிஸ்டெம்பர் பெயிண்ட் கொண்டு வர்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகவும் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...