உடுமலை நகர பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை முகாம்: 500க்கும் மேற்பட்ட படிவங்கள் வழங்கப்பட்டன

உடுமலை நகர பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் சார்பு அணி தலைவர்களுக்கு வழங்கப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாம் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரிலும், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தலின் படியும் ஏற்பாடு செய்யப்பட்டது.



உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நகர பொதுச்செயலாளர்கள் தம்பிதுரை மற்றும் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் உடுமலை நகர மண்டல பொறுப்பாளரும் மாவட்ட பொதுச் செயலாளருமான வடுகநாதன், மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் மாநில விவசாய அணி செயலாளருமான மௌனகுருசாமி ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்.



இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் உடுமலை நகர பாஜக பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் சார்பு அணி தலைவர்களுக்கு வழங்கப்பட்டன.



உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள உடுமலை நகர பொறுப்பாளர்களான உமா குப்புசாமி, நாச்சியப்பன், குருசாமி, பாலசுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.



இந்த முக்கிய நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் பார்வையாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, நகர மகளிர் அணி தலைவர் ரதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பால்ராஜ், இளைஞர் அணி பொதுச் செயலாளர் பாலகுரு, நகர செயலாளர்கள் ஹரிகரன், முருகேசன், நகர துணைத்தலைவர் செல்வி, நகர மகளிர் அணி பொருளாளர் விஜயலட்சுமி, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...