கோவை துடியலூரில் அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கல்; திமுக உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்

கோவை துடியலூர் அருகே விஸ்வநாதபுரத்தில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கப்பட்டன. திமுக உறுப்பினர்கள் சிலர் அதிமுகவில் இணைந்தனர். எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



கோவை: கோவை துடியலூர் அருகே விஸ்வநாதபுரத்தில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் துடியலூர் பகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு உறுப்பினர் உரிமை சீட்டுகளை வழங்கினார்.



விஸ்வநாதபுரம் 1வது வட்ட கழக அவைத்தலைவர் செல்வகுமார் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி தலைமை வகித்தார். ஐ.டி விங் மாவட்ட செயலாளர் கேபில் மணிகண்டன், பகுதி அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரமோகன், 1 வது வட்ட கழக செயலாளர் சாந்திபூசன், 14 வது வட்ட கழக செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ், 15 மற்றும் 15ஏ ஆவது வட்டக் கழக செயலாளர்கள் சுரேஷ்குமார், சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பி.ஆர்.ஜி.அருண்குமார் பேசுகையில், "வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அயராது உழைக்க வேண்டும். இதற்காக நமது ஆட்சியில் மக்களுக்காக செய்த நற்பணிகள் குறித்தும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் ஏமாற்றுவேலைகள் குறித்தும் வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் பூத்கமிட்டி வேலைகளை சரியாக செய்ய வேண்டும்" என்று கூறினார்.



இந்நிகழ்ச்சியில் திமுக 1வது வார்டு துணை செயலாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் சவுந்திரராஜ், தனுஷ்குமார் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு பி.ஆர்.ஜி.அருண்குமார் கட்சி சால்வைகளை அணிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் 1வது வட்ட கழக நிர்வாகிகள் முத்து, சண்முகசுந்தரம், செல்வராஜ், மோகன்ராஜ், ரங்கநாதன், நந்தகோபால், ராஜகோபால், பதமநாபன், சம்பத், கணேஷன், ஜீவா, கெளதம், கவிப்பிரியா, தீரவிக்ரமன், 14வது வட்ட கழக நிர்வாகிகள் சி.டி.சி செல்வம், ரமேஷ்குமார், சென்னியப்பன், கலா, விக்னேஷ், மாடசாமி, சிவமூர்த்தி, சிவகுமார், சரவணன், 15 மற்றும் 15 ஏ வட்டகழக நிர்வாகிகள் நடராஜ், நந்தகுமார், ரமேஷ், ராஜேஷ், வீரப்பன், பழனிச்சாமி, கருப்புசாமி, அபிபுல்லா, கணேஷன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...