உடுமலையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

உடுமலையில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. உடுமலை - மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முக்கியமாக, கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அவர்களை டி பிரிவு பட்டியலில் சேர்க்க வேண்டும், கருணை அடிப்படையில் மறைந்த கிராம உதவியாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.



இந்நிகழ்வில் உடுமலை வட்டக் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, வட்டத் தலைவராக கிரி, துணைத் தலைவராக மாரிமுத்து, செயலாளராக பரமேஸ்வரன், துணைச் செயலாளராக அழகிரி, பொருளாளராக கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதியாக பழனிச்சாமி மற்றும் திருமதி சுகந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மாநில சங்க ஆலோசகர்களான மாரியப்பன், மகேந்திரன், திருப்பூர் மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட தணிக்கையாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மடத்துக்குளம் வட்ட நிர்வாகிகளான கருப்புசாமி, பொன்னுச்சாமி, ராஜலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...