கோவையில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு 5 கி.மீ ஓட்டம்

கோவையில் தமிழ்நாடு சுயநிதி கல்லூரிகள் சங்கம் சார்பில் 'போதைப்பொருள் இல்லா வளாகம் 2024' என்ற தலைப்பில் 5 கி.மீ ஓட்டம் நடைபெற்றது. மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு முழக்கங்களுடன் ஓடினர்.


Coimbatore: கோவையில் தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம் சார்பாக, 'போதைப்பொருள் இல்லா வளாகம் 2024' என்ற தலைப்பில் 5 கி.மீ ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் போதைப்பொருட்களை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு முழக்கங்களுடன் ஓடினர்.

'போதைப்பொருள் வேண்டாம், வாழ்க்கைக்கு ஆம் என்று சொல்லுங்கள்' என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த ஓட்டம், ஆகஸ்ட் 31 சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு கோவை ரேஸ் கோர்ஸில் தொடங்கி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முடிவடைந்தது. இந்நிகழ்வின் நோக்கம் போதைப்பொருள் இல்லாத வளாகத்தை மேம்படுத்துவதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதும் ஆகும்.



ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் முனைவர் அஜித் குமார் லால் மோகன், செயலாளர் டி சேதுபதி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, IAS அவர்கள் கலந்து கொண்டு 5 கி.மீ ஓட்டத்தை துவக்கி வைத்தார்.



கௌரவ அழைப்பாளர்களாக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கிய இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்டோர் அவினாசி சாலை வழியாக வந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் வந்தடைந்தனர்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கத்தின் செயலாளர் சேதுபதி, இளம் மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்கு இது போன்ற விழிப்புணர்வு தற்போது அவசியம் தேவைப்படுவதாக கூறினார். தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



பரிசளிப்பு விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கத்தலைவர் மற்றும் கோயம்புத்தூர் ஏஜேகே கல்விக் குழும நிறுவனங்களின் செயலர் பேராசிரியர் முனைவர் அஜீத் குமார் லால் மோகன் அவர்கள் தலைமை உரை வழங்கினார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். எஸ்என்எம்வி கல்லூரி முதல்வர் நன்றியுரை வழங்கினார்.



முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசும் பதக்கமும் வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் முதல் இடம் மாரி சரத் K (அஜ்வா ஸ்போர்ட்ஸ் கிளப், ராஜபாளையம்), இரண்டாம் இடம் நவீன் V (டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி), மூன்றாம் இடம் வீரபத்ரன் P (ஜெனிசிஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்) ஆகியோர் பெற்றனர். பெண்கள் பிரிவில் முதல் இடம் சப்னா ஷெரின் M (ஜெனிசிஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்), இரண்டாம் இடம் கலையரசி (சுகுணா கலை அறிவியல் கல்லூரி), மூன்றாம் இடம் மகேஷ்வரி (தமிழ்நாடு காவல் துறை) ஆகியோர் பெற்றனர்.



முதல் 50 இடங்களில் வந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. சுமார் 80 கல்லூரிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 5 கி.மீ ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...