கோவை வேளாண் பல்கலையில் காளான் வளர்ப்பு பயிற்சி: செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறுகிறது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.590. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) காளான் வளர்ப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் 2024 மாதத்திற்கான பயிற்சி, 05.09.2024 வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமாக ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) (வரி கட்டணம் உட்பட) நேரிடையாக செலுத்த வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 0422-6611336, 0422-6611226. மின்னஞ்சல் முகவரி: [email protected].

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...