மனதை மயக்கும் உதகை பைகாரா நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்


நீலகிரி மாவட்டம், உதகை பைகாரா அருவி நீர்வீழ்ச்சி சுற்றுலா தளங்களில் மிகவும் பிரசிதிபெற்றதாகும். இயற்கை எழில்கொஞ்சும் இதன் அழகை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவர். 

இதனிடையே, தமிழகம் முழுவதும் கடந்த அண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும், சரிவர பருவ மழை பெய்யாததன் காரணமாக பசுமை நிலங்கள் வறண்டு காணப்படுகிறது.



இந்நிலையில், தற்போது வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து மலைப் பகுதிகளில் சற்று குளுமையான சீதோஷனம் நிலவிவருகிறது.

உதகையில் கடந்த சில மாதங்களாக மழையின்றி அங்கமைந்துள்ள பைகாரா நீர்வீழ்ச்சியில் நிர்வரத்து இல்லாமல் முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த இரு மாதமாக பைகாரா நீர்வீழ்ச்சியில் செய்யப்பட்டு வந்த மின்உற்பத்தியும் தடைபட்டிருந்தது. 



இந்நிலையில், தற்போது பைகாரா நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சில தினங்களாகப் பெய்த மழையின் காரணமாக, பைகாரா நீர்வீழ்ச்சியில் நீர் திரண்டு ஓடிவருகிறது. வெயில் வாட்டி வரும் வேளையில் இந்த குளுகுளு காட்சியினைக் காண சுற்றுலா பயணிகளின் குவிந்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...