சூலூர் அருகே இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு மீட்பு

கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் ஒரு இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பு பிடி வீரர் சஜீஸ் பாம்பை மீட்டு காட்டில் விடுவிக்க உள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் ஒரு போட்டோ ஸ்டுடியோ முன்பு சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

தினேஷ் என்பவர் தனது வாகனத்தில் பெட்ரோல் உள்ளதா என்று பார்க்க ஸ்கூட்டரின் டேங்கைத் திறந்த போது அங்கு பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் அருகில் இருந்த பாம்பு பிடி வீரர் சஜீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சஜீஸ், இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். அவர் அந்த பாம்பு அரிய வகை மண்ணுளிப் பாம்பு என்று தெரிவித்தார். இந்த வகை பாம்பின் வால் பகுதியும் தலை போன்று இருப்பதால், இரண்டு தலை உள்ள பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது என்றார்.

மேலும், இந்த பாம்பு விஷத்தன்மை அற்றது என்றும், மருத்துவ நோக்கங்களுக்காக சிலர் இதை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் சஜீஸ் விளக்கினார். பிடிபட்ட மண்ணுளிப் பாம்பை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த காட்டில் விடுவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...