கோவை மாநகராட்சி ஆணையாளர் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் மத்திய மண்டலத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால், சமுதாய நலக்கூடம், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.





இந்த ஆய்வின்போது, வார்டு எண் 47க்குட்பட்ட சங்கனூர் பிரதான சாலை பகுதி, நால்வர் லே-அவுட் பகுதி மற்றும் இரத்தினபுரி, பி.எம்.சாமி காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு பணிகளை ஆணையாளர் பார்வையிட்டார்.



மேலும், காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தினை ஆய்வு செய்து, அதனை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 47க்குட்பட்ட செல்வகுமாரசாமி கார்டன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் சிறுவர் விளையாட்டு பூங்காவை பார்வையிட்ட ஆணையாளர், பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, இரத்தினபுரி, அமரர் ஜீவா சாலையின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறுவர் விளையாட்டு பூங்காவையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர் செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...