கோவை மாணவிகள் அஸ்மிதா மகளிர் யோகா போட்டியில் 11 பதக்கங்கள் வென்று சாதனை

திருச்சியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான அஸ்மிதா கேலோ இந்தியா மகளிர் யோகா போட்டியில் கோவை மாணவிகள் 3 தங்கம் உட்பட 11 பதக்கங்கள் வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: திருச்சியில் தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு யோகாசன சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் யோகாசன பாரத் சார்பாக நடைபெற்ற தென் மண்டல அளவிலான அஸ்மிதா கேலோ இந்தியா மகளிர் யோகா போட்டியில் கோவை மாணவிகள் சிறப்பாக செயல்பட்டு 11 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இப்போட்டியில் புதுவை, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட யோகா வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு அணி சார்பாக கோவை யோவா யோகா அகாடமியின் தலைமை பயிற்சியாளர் வைஷ்ணவி மற்றும் அவரது மாணவிகள் தாக்ஷயா ஸ்ரீ, சக்தி சஞ்சனா, ராகவர்தினி, பவ்ய ஸ்ரீ, ஷிவானி ஆகிய ஆறு பேர் கலந்து கொண்டனர்.



18 வயதிற்கு உட்பட்ட மற்றும் அதற்கு மேல் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில், கலை ஜோடி, பாரம்பரிய யோகா, கலை ஒற்றையர், கலை குழு என பல்வேறு பிரிவுகளில் மூன்று தங்கம், எட்டு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் தேசிய அளவிலான அஸ்மிதா கேலோ இந்திய பெண்கள் லீக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

வெற்றி பெற்று திரும்பிய வீராங்கனைகள் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி-ஐ சந்தித்து வாழ்த்து பெற்றனர். இச்சந்திப்பின் போது, தேசிய அளவில் நடைபெற உள்ள மகளிர்க்கான போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து வீராங்கனைகள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆனந்த் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை பிரிவு சீனியர் மேனேஜர் அருணா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் போது யோவா யோகா அகாடமியின் இயக்குனர் சரவணன் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...