மேட்டுப்பாளையத்தில் புதிய பசுமைப் பூங்கா மற்றும் பள்ளி வசதிகள் திறப்பு

நீலகிரி எம்பி ஆ.ராசா மேட்டுப்பாளையத்தில் ரூ.38 லட்சம் மதிப்பிலான பசுமைப் பூங்கா மற்றும் ரூ.53 லட்சம் மதிப்பிலான பள்ளி வசதிகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-30 சாந்தி நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 38 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பசுமைப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா இன்று செப்.4 திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.இரவி, மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள்வடிவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர். சண்முகசுந்தரம், அ.அசரப் அலி, டி.பி.சுப்பிரமணியம், காரமடை ஒன்றிய கழக செயலாளர்கள் கல்யாணசுந்தரம், சுரேந்திரன், மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் முனுசாமி, முகமது யூனுஸ், மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.



மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 29 மணி நகர் உயர்நிலைப் பள்ளியில் ரூபாய் 53 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அறிவியல் ஆய்வகம், புதிய கழிப்பறை, புதிய சுற்றுச் சுவர் ஆகியவற்றை பள்ளி மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா இன்று (செப்.4) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியிலும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.இரவி, மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள்வடிவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அ.அசரப் அலி, டி.பி.சுப்பிரமணியம், காரமடை ஒன்றிய கழக செயலாளர்கள் கல்யாணசுந்தரம், சுரேந்திரன், மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் முனுசாமி, முகமது யூனுஸ், மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...