7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை: திருச்சியிலிருந்து கோவைக்கு விரைந்த ஆம்புலன்ஸ்

திருச்சியில் பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக, காவல்துறை பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் 2.5 மணி நேரத்தில் கோவை வந்தடைந்தது. குழந்தையின் உயிரைக் காக்க மருத்துவர்கள் தயாராக உள்ளனர்.



Coimbatore: திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைக்கு பிறவியிலேயே இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குழந்தைக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால், கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் திருச்சியில் இருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ், காவல்துறையின் உதவியுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வேகமாக கோவையை நோக்கி பயணித்தது. ஆம்புலன்ஸ் தடையின்றி செல்வதற்காக சாலை முழுவதும் கிரீன் காரிடார் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இரண்டரை மணி நேரத்தில் குழந்தை பாதுகாப்பாக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஸ்வின் கூறுகையில், "வேகத்தடை மற்றும் பள்ளமான இடங்களில் எச்சரிக்கையாக செல்லும்படி ஆம்புலன்சில் இருந்த மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். போக்குவரத்து இடையூறு இல்லாமல் காவல்துறையினர் மிகவும் உதவிகரமாக இருந்தனர். உரிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்," என்றார்.

மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், "குழந்தையை பரிசோதித்து பிரச்சனையை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க இருக்கிறோம். பிறந்து ஏழே நாளான குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலான காரியம். ஏற்கனவே, பிறந்து ஐந்தே நாளான குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து தற்போது அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. சிறப்பான மருத்துவ நிபுணர் குழு இருப்பதால், விரைவாக குழந்தை வந்தடைந்ததால் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...