7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை: திருச்சியிலிருந்து கோவைக்கு விரைந்த ஆம்புலன்ஸ்

திருச்சியில் பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக, காவல்துறை பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் 2.5 மணி நேரத்தில் கோவை வந்தடைந்தது. குழந்தையின் உயிரைக் காக்க மருத்துவர்கள் தயாராக உள்ளனர்.



Coimbatore: திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைக்கு பிறவியிலேயே இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குழந்தைக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால், கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் திருச்சியில் இருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ், காவல்துறையின் உதவியுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வேகமாக கோவையை நோக்கி பயணித்தது. ஆம்புலன்ஸ் தடையின்றி செல்வதற்காக சாலை முழுவதும் கிரீன் காரிடார் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இரண்டரை மணி நேரத்தில் குழந்தை பாதுகாப்பாக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஸ்வின் கூறுகையில், "வேகத்தடை மற்றும் பள்ளமான இடங்களில் எச்சரிக்கையாக செல்லும்படி ஆம்புலன்சில் இருந்த மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். போக்குவரத்து இடையூறு இல்லாமல் காவல்துறையினர் மிகவும் உதவிகரமாக இருந்தனர். உரிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்," என்றார்.

மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், "குழந்தையை பரிசோதித்து பிரச்சனையை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க இருக்கிறோம். பிறந்து ஏழே நாளான குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலான காரியம். ஏற்கனவே, பிறந்து ஐந்தே நாளான குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து தற்போது அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. சிறப்பான மருத்துவ நிபுணர் குழு இருப்பதால், விரைவாக குழந்தை வந்தடைந்ததால் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...