தொண்டாமுத்தூரில் சின்ன வெங்காய விளைச்சல் அதிகம்; போதிய விலையின்மையால் விவசாயிகள் கவலை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் சின்ன வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விலை உயரும் வரை பட்டறையில் சேமித்து வைக்க முடிவு செய்துள்ளனர்.



Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால், போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தொண்டாமுத்தூர் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செம்மண் நிலத்தில் ஏக்கருக்கு 5 டன்னும், களிமண் நிலத்தில் 3 டன்னும் விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால், தற்போது கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



இந்த நிலையில், விலை உயரும் வரை பட்டறையில் வெங்காயத்தை சேமித்து வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், பட்டறையில் சேமிக்கும்போது காலநிலை மாற்றம், அதிக மழை, காற்றோட்டமின்மை போன்ற காரணங்களால் வெங்காயம் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது.

இதனைத் தடுக்க, பட்டறையில் வெங்காயத்தை பாதுகாப்பாக சேமிக்கும் முறைகள் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சின்ன வெங்காயத்திற்கு கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விதை, உரம், மருந்து, பாசனம், கூலி என அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய குறைந்த விலை விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, சின்ன வெங்காயத்திற்கு நியாயமான விலை நிர்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...