கோவை கொடிசியாவில் 'ராமேட் இந்தியா 2024' பேப்பர் மற்றும் பேக்கேஜிங் கண்காட்சி: செப்டம்பர் 10 முதல் 12 வரை

கோவை கொடிசியாவில் செப்டம்பர் 10 முதல் 12 வரை நடைபெறும் 'ராமேட் இந்தியா 2024' கண்காட்சியில் பேப்பர் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும். 150 கோடி ரூபாய் வர்த்தகம் எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற செப்டம்பர் 10 முதல் 12 வரை "3P Expo"வின் ராமேட் இந்தியா 2024 கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக மூலப்பொருட்கள் மற்றும் ஆதார வளங்களுக்கான இந்த கண்காட்சியில், பேப்பர் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் குறித்த விரிவான காட்சிப்படுத்தல்கள் இடம்பெறும்.

இந்த கண்காட்சியின் போஸ்டர் வெளியீட்டு விழா கோவை கொடிசியா அரங்கில் செப்டம்பர் 4 அன்று நடைபெற்றது. இதில் "3P Expo" தலைவர் ஜெகதீசன், கொடிசியா தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின் சிறப்பம்சங்களாக, லாஜிஸ்டிக்ஸ், வேர்ஹவுசிங் மற்றும் மெட்டீரியல் ஹேண்ட்லிங் துறை சார்ந்த அரங்குகள், 55 காட்சி அரங்குகள், 20க்கும் மேற்பட்ட நேரடி உற்பத்தியாளர்கள் பங்கேற்பு ஆகியவை இடம்பெறும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கண்காட்சியின் மூலம் 150 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் தொழில்நுட்பங்களை எடுத்துரைக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கோவா, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். பார்வையாளர்கள் அனைவருக்கும் நுழைவு இலவசம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...