கோவை CCMA அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர் தின விழா: மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு

கோவை CCMA அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை ராஜவீதி பகுதியில் அமைந்திருக்கும் கோவை துணி வணிகர் சங்க (CCMA) அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் எலைட் சார்பில் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் எலைடின் தலைவர் மணிகண்டன் மற்றும் செயலாளர் செந்தில் வேலன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநகராட்சி ஆணையாளருக்கு ஜூனியர் ரெட் கிராஸ், தமிழ்நாடு சாரணர் படை, சுற்றுச்சூழல் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவியர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



இந்நிகழ்வில் உரையாற்றிய மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன், தற்போதும் தனது பையில் தன் ஆசிரியரின் புகைப்படத்தை வைத்திருப்பதாகவும், தானும் ஒரு ஆசிரியர் என்றும் தெரிவித்தார். ஆசிரியர்கள் நம் வாழ்வின் ஆணிவேர் என்பதை உணர்ந்து அவர்களை நினைவு கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தனது ஆசிரியரின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட ஆணையாளர், தன் வெற்றியில் அவரது ஆசிரியர் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார். பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தொடர்ந்து, 2023-24 கல்வியாண்டில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கினார். மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெறவிருக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பரதநாட்டியம், நாடகம், பாடல் உள்ளிட்ட மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...