கோவை: மாணவியிடம் தகாத வார்த்தை பேசிய ஆசிரியர் கைது - ஆசிரியர் தினத்தில் போக்சோ வழக்கு பதிவு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவியிடம் தகாத வார்த்தை பேசிய ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆசிரியர் தினத்தன்று நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவியிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் "நம்ம ஊரு நம்ம பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் அறிவியல் பிராக்டிகல் வகுப்பு எடுப்பதற்காக காரமடை அருகிலுள்ள கண்ணார்பாளையத்தைச் சேர்ந்த 39 வயதான அய்யாசாமி என்பவர் வந்திருந்தார். அவர் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அவரிடம் எப்போது தங்கள் வகுப்பிற்கு பாடம் எடுக்க வருவார் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அய்யாசாமி, "இரவு 11 மணிக்கு வருகிறேன், பாய் எடுத்து வை" என்று தகாத முறையில் பேசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த மாணவி, உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் இந்திராணி சோபியா தலைமையிலான போலீசார் ஆசிரியர் அய்யாசாமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவம் உண்மை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, அய்யாசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...