சிறுமுகை அருகே பவானி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வச்சினம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வச்சினம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிடைத்த விவரங்களின்படி, சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றில் சடலம் ஒன்று மிதந்து வருவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக இது குறித்து சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



தகவல் அறிந்த சிறுமுகை காவல்துறையினர் மற்றும் லைப் காட் பிரிவு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆற்றில் மிதந்து வந்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட சடலம் யாருடையது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இல்லை.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமுகை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலத்தின் அடையாளத்தை கண்டறியவும், மரணத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...