கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழம் விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.230 வரை விற்பனை

கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழ விலை கடந்த இரு நாட்களில் கிலோ ரூ.160லிருந்து ரூ.230 ஆக உயர்ந்துள்ளது. வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாள் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழ விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது எலுமிச்சம்பழ வரத்து குறைந்துள்ளதால், நேற்று (செப்டம்பர் 5) ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.200 முதல் ரூ.230 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த இரண்டு நாட்களில் கிலோவுக்கு சுமார் ரூ.70 வரை அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, முகூர்த்த நாள் என்பதால் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதனால் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வரத்து குறைவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...