விநாயகர் சதுர்த்தி: கோவை பூ மார்க்கெட்டில் குவிந்த மக்கள் - பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்வு

கோவையில் விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக பூ மார்க்கெட்டில் மக்கள் குவிந்தனர். பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. மல்லி, செவ்வந்தி, ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது.



கோவை: விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் அலங்காரத்திற்கான பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி, 800 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

செவ்வந்தி பூ கடந்த வாரம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் 200 முதல் 300 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ரோஜா பூக்களின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கின்றன.



விநாயகர் அலங்காரத்துக்கு தேவைப்படும் தென்னை குருத்து தோரணம், மா இலை தோரணம், எருக்கம் பூ மாலை உள்ளிட்ட பூஜை மலர் மற்றும் தோரணங்களின் விலையும் உயர்ந்திருக்கின்றன.



சந்தைகளில் பூக்களின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்த போதிலும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்பதனால், பொதுமக்கள் பூக்களை வாங்குவதற்கு ஆர்வமுடன் குவிந்திருக்கின்றனர்.



விலை உயர்ந்த போதிலும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்பதனால், பூ வாங்க வேண்டும் என தெரிவித்த பெண்கள், ரோஜா, செவ்வந்தி மல்லி போன்ற பூக்களை வாங்கி செல்கின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...