மேட்டுப்பாளையம் அருகே குரங்குகள் அட்டகாசம்: பூனை உயிரிழப்பு, நாய்கள் படுகாயம்

மேட்டுப்பாளையம் அருகே கூடுதுறை மலைப்பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. ஒரு பூனை உயிரிழந்தது, இரண்டு நாய்கள் படுகாயமடைந்தன. மக்கள் பாதுகாப்பு கோரி வனத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சாரத்துக்குட்பட்ட சமயபுரம் அருகே உள்ள கூடுதுறை மலைப்பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு பூனை குரங்கால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது, மேலும் இரண்டு நாய்கள் படுகாயமடைந்துள்ளன.

கூடுதுறை மலைப்பகுதி பவானி ஆற்றின் அருகேயும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியும் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியின் அமைப்பு காரணமாக குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.



சமீபத்தில், இப்பகுதியில் வசிக்கும் தங்கமணி என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனையை ஒரு குரங்கு தாக்கி, அதன் வயிற்றுப் பகுதியைக் கிழித்துள்ளது. இந்த தாக்குதலில் பூனை உயிரிழந்தது. அதே குரங்கு அருகில் இருந்த இரண்டு நாய்களையும் கழுத்துப் பகுதியில் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதனால் நாய்களுக்கு கழுத்தில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், குரங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து குழந்தைகளையும் தாக்க வாய்ப்பு உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் விரைவில் கூண்டு வைத்து சேட்டை செய்யும் குரங்குகளைப் பிடித்து, அடர் வனப் பகுதிக்குள் விட வேண்டும் என கூடுதுறை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...