போதைப் பொருள் விற்பனை: ஹரியானாவில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கோவைக்கு கொண்டு வரப்பட்டார்

கோவையில் போதைப் பொருள் விற்பனை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ஹரியானாவில் கைது செய்யப்பட்டு, கோவைக்கு கொண்டு வரப்பட்டார். 20,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்து வந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் அரியானா மாநிலத்தில் வைத்து கைது செய்தனர். இவரிடம் இருந்து 20 ஆயிரம் மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஜூலை மாதம் கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்த துணை நடிகைகள் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். விசாரணையில், அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் கார்க் (43) என்பவரிடம் இருந்து மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியதும், விற்றதும் தெரிய வந்தது.

மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் தனிப்படை போலீசார் அரியானாவில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன் விளைவாக, ஹரியானாவில் சச்சினை பிடித்து கைது செய்தனர். அங்குள்ள நீதிமன்றத்தில் சச்சினை ஆஜர்படுத்தி, கோவைக்கு நேற்று (செப்டம்பர் 6) அழைத்து வந்தனர். பின்னர், விசாரணையைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் சச்சினை அடைத்தனர்.

மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "சச்சின் வலி நிவாரண மாத்திரைகளை பரிந்துரைச்சீட்டு இல்லாமல், போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்துள்ளார். இவரிடம் இருந்து 20 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர், மாத்திரைகளை கூரியர் மூலம் தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வந்துள்ளார். 100 மாத்திரை கொண்ட அட்டையை ரூ.600க்கு வாங்கி அதை ரூ.3 ஆயிரத்து விற்றுள்ளார். இவரிடம் வாங்குபவர்கள் அதை ரூ.30 ஆயிரத்துக்கு விற்கின்றனர்," என்றார்.

மேலும் அவர், "போதை மாத்திரை புழக்கத்தை ஒழிக்க போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் நடப்பாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கஞ்சா, போதை மாத்திரைகள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்ற 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 158 கிலோ கஞ்சா, 2,598 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இதுவரை 19 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 39 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 132 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...