கோவையில் விநாயகர் சிலைகளை கரைக்க குளக்கரைகளில் முன்னேற்பாடுகள் தீவிரம்

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 708 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. செப்டம்பர் 9, 11 தேதிகளில் ஊர்வலம் நடைபெற உள்ளது. சிலைகளை கரைக்க குனியமுத்தூர் உள்ளிட்ட குளக்கரைகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


கோவை: கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் 708 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக குனியமுத்தூர் உள்ளிட்ட முக்கிய குளக்கரைகளில் பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக மொத்தம் 3,500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி (தமிழகம்), பாரத் சேனா மற்றும் பிற இந்து அமைப்புகள் சார்பில், செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.

விநாயகர் சிலைகள் சிங்காநல்லூர், குறிச்சி குளம், குனியமுத்தூர், வெள்ளக்கிணறு மற்றும் முத்தண்ணங்குளம் ஆகிய இடங்களில் கரைக்கப்பட உள்ளன. இந்த இடங்களில் சிலைகளை பாதுகாப்பாக கரைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.



குறிப்பாக, குனியமுத்தூர் குளக்கரையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.



விழா காலத்தில் எந்தவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...