தாராபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்களின் அராஜகம் - வைரலாகும் வீடியோ

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாராபுரம் அரசு போக்குவரத்து கழக கிளை பேருந்து ஒன்று, கரூர் செல்வதற்காக தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது, தாராபுரம் முதல் கரூர் வரை செல்லும் தனியார் பேருந்து (TN 47 V 2005) ஓட்டுநர்கள், அரசு பேருந்துக்கு வழி விடாமல் அராஜகம் செய்தனர். மேலும், மற்றொரு தனியார் பேருந்து (TN 47 AF 9559) உரிமையாளர் கந்தன் என்பவரும் அரசு பேருந்துக்கு வழிமறித்து அராஜகம் செய்தார்.



இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களிடையே இச்சம்பவம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...