ஆனைமலை தென்னை நாற்றுப்பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை - தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

ஆனைமலை அருகே ஆழியாற்றில் உள்ள தோட்டக்கலைத் துறையின் தென்னை நாற்றுப்பண்ணையில் நெட்டை மற்றும் குட்டை ரக கலப்பின தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Coimbatore: ஆனைமலை அருகே உள்ள தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் தென்னை நாற்றுப் பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, ஆனைமலை அருகே ஆழியாற்றில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் இயங்கும் தென்னை நாற்றுப்பண்ணையில் வளர்க்கப்படும் நெட்டை, குட்டை ரக கலப்பின நாற்றுகள் தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

விற்பனை விலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ள அவர், நெட்டை ரக கன்றுகள் ஒன்று ரூ.65க்கும், கலப்பின ரக கன்றுகள் ஒன்று ரூ.125க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். தென்னங்கன்றுகள் வாங்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு ஆனைமலை தோட்டக்கலை துறை அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...