அன்னூர் அருகே குடிநீர் குழாய் உடைப்பு: ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக ஓடியது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியம்பாளையம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி சாக்கடையில் கலந்தது. அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரியம்பாளையம் பகுதியில் இருந்து பிள்ளையப்பன்பாளையம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

முதலில் சிறிய அளவில் இருந்த உடைப்பு, பின்னர் தண்ணீர் அழுத்தத்தால் பெரிதாகி, சுமார் 3 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீச்சி அடித்தது. இதன் காரணமாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி, சாலையோரங்களில் சென்று சாக்கடையில் கலந்து ஓடியது.



சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பொதுமக்கள் உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குடிநீர் வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தற்போது, குழாய் உடைப்பை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் குடிநீர் வினியோகம் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...