கேரள மீன் கழிவுநீரை கொட்டிய வாகனத்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

பொள்ளாச்சி அருகே கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் கழிவுநீரை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிய வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் கழிவுநீர் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டதை தடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான TN75 AJ1785 என்ற எண் கொண்ட வாகனத்தில் கோழிக்கோட்டில் இருந்து தூத்துக்குடி பகுதியில் செயல்படும் MBN எனும் தனியார் மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு மீன் கழிவுநீர் கொண்டு செல்லப்பட்டது.



இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து கேரளா செல்ல வந்த வாகனத்திலிருந்து கடும் துர்நாற்றம் வீசிய மீன் கழிவுநீர் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திறந்து விடப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி, கோமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இப்பிரச்சனை குறித்து கோமங்கலம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், "கேரளா மாநிலத்தில் கோழி இறைச்சி, மருத்துவ கழிவுகள் மற்றும் மீன் கழிவுகளை கொட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான தண்டனைகள் இருப்பதால், தமிழக எல்லையோர பகுதிகளில் இவற்றை கொட்டி வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக தடை செய்து, கழிவுகளை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்" என தெரிவித்தனர்.



இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், இது போன்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...