உடுமலையில் விநாயகர் சிலை ஊர்வலம்: இளம் பெண்கள் நடனமாடி உற்சாகம்

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 250 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இளம் பெண்கள் நடனமாடி உற்சாகம் அளித்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடந்த 7-ம் தேதி 385 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.



இன்று இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 250 சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து சிலைகளை மடத்துக்குளம் அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.



விநாயகர் ஊர்வலத்தை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி மற்றும் உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



இதையடுத்து செண்டை வாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் இளம் பெண்கள் உற்சாக நடனத்துடன் கல்பனா சாலை, கச்சேரி வீதி, பெரிய கடை வீதி, பழனி ரோடு வழியாக ஊர்வலம் அமராவதி ஆற்றை நோக்கி சென்றது.

ஊர்வலத்தை யொட்டி உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு வெ.ஆறுமுகம் தலைமையிலான போலீசார் முன்னே செல்ல ஊர்வலம் அதைத் தொடர்ந்து சென்றது. ஊர்வலத்தை யொட்டி உடுமலை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...