கோவையில் காலாவதியான குளிர்பானம் விற்பனை: கடை உரிமையாளரை எதிர்த்த தம்பதியின் வீடியோ வைரல்

கோவை போத்தனூரில் உள்ள உணவகத்தில் காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டதை கண்டித்த தம்பதியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.


கோவை: கோவை போத்தனூரைச் சேர்ந்த சன்சர் - நிஷா தம்பதியினர் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சாவிற்காக காத்திருந்தபோது, அருகிலுள்ள டீக்கடையில் கேக் மற்றும் மா (Maa) குளிர்பானம் வாங்கினர். குளிர்பானத்தை திறந்து குடிக்கும்போது அது கெட்டுப்போயிருப்பதை உணர்ந்தனர்.

கடையில் பணிபுரிந்த நபரிடம் இது குறித்து கேட்டபோது, அவர் குளிர்பானம் கெட்டுப்போகவில்லை என்றும், அதன் காலாவதி தேதி இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதாகவும், அது சமீபத்தில் வாங்கப்பட்டது என்றும் கூறினார். ஆனால், அருகில் இருந்தவர்களிடம் குடித்துப் பார்க்கச் சொன்னபோது, அதுவும் கெட்டுப்போயிருப்பதை உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்தை தங்கள் செல்போனில் பதிவு செய்த தம்பதியினர், அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...