இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 6ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு


மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சிவானந்த காலனி பகுதியில் வருகின்ற மே 6 ஆம் தேதியன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியர் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய பாஜக அரசு பல்வேறு வகையில் இந்தியை திணித்து வருகிறது. மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்த்து முதற்கட்டமாக வருகின்ற மே 6 ஆம் தேதியன்று கோவை மாவட்டம், சிவானந்த காலனி பகுதியில் அனைத்துக் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.

கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வரை மலையாளம் கட்டாய பாடமாக்கப்பட்டது போல, தமிழகத்திலும் தமிழ் பத்தாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். மேலும், இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை கோவை மாவட்டத்தில் இருந்து துவங்க உள்ளோம். இதனை தொடர் போராட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...