உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 24வது ஆண்டு பரிசளிப்பு விழா: சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை சார்பில் 24வது ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை சார்பில் 24வது ஆண்டாக இந்த விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.



விழாவில் 2023-2024 ஆம் ஆண்டில் கல்லூரி அளவில் துறை வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற 24 மாணவர்களுக்கு ரொக்க பரிசாக தலா ரூ.3,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.



மேலும், பல்கலைக்கழக தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற 15 மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



சிறப்பு பரிசாக, வணிகவியல் துறையில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சபரீஷ்வரிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் முன்னாள் மாணவருமான சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.





விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகளான ஆடிட்டர் கந்தசாமி, ஆடிட்டர் கண்ணன், ராஜமாணிக்கம், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளான முனைவர் கிருஷ்ணன், பேராசிரியர் முகமது ஜாபர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு விழா மாணவர்களின் கல்வி சாதனைகளை கொண்டாடும் விதமாக சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...