மாநகராட்சியின் தூய்மை விளம்பர பலகை மட்டும் இங்கே? வேலை பணிகள் எங்கே?


கோவை மாநகராட்சி தூய்மை பாரத இயக்கம் சார்பில் ஜனவரி மாதம் நடைபெற்ற 'ஸ்வச் சர்வேக்சன் 2017' கோவை முதலிடம் பெறுவதற்கு கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது. 


ஸ்மார்ட் சிட்டி குறித்து மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை மட்டும் இன்னும் ஆங்காங்கே உள்ள நிலையில், அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதால் வழக்கம்போல் கோவை மாநகரம் பழைய நிலைக்கு மாறியுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.





கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பை மற்றும் சாலைகளில் வழிந்தோடும் கழிவு நீரினால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போத்தனூர் ரயில் நிலையம் முன்பு உள்ள சாலையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக சாலையில் சாக்கடை நீர் வழிந்த்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் தினத்தோறும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.




அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டும் செயல்பட்டு வருகிறது. இதில் பத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தொழில் நடத்தி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கும் இந்த நிலைமை மாறுவதற்கும் மாநகராட்சி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள். 







Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...