கோவை துடியலூரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி பாராட்டு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டியில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கவுன்சிலர் கார்த்திக்கின் தேர்தல் பணியை பாராட்டினார்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ஆ.ரவி உரையாற்றினார். அவர் பேசுகையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் நாடாளுமன்ற தேர்தலுக்காக உழைத்து வெற்றி பெற்றதைபோல, வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற இப்போது இருந்தே தீவிரமாக செயல்பட வேண்டும்" என்றார்.



மேலும் அவர், "தலைவருக்கு நாம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தரவேண்டும்" என்று வலியுறுத்தினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுத் தந்த கார்த்திக்கை பாராட்டினார்.

இக்கூட்டத்தில் துணைச்செயலாளர் அசோக்பாபு ஆறுகுட்டி, முன்னாள் எம்.பி நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்ரன், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், பேரூர் கழக செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரங்கநாயகி, தலைமை கழக பேச்சாளர் சஹா விக்னேஷ், ஒன்றிய அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்ராஜா, சண்முகசுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் அசோக்குமார், குருடம்பாளையம் சரவணன், ஓட்டுநர் அணி தலைவர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், மாவட்ட ஐ.டி விங்க் ஹரி, நாயக்கன்பாளையம் சந்துரு ஜெகவி, கோவனூர் ரவி, குருடம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன் உட்பட பல கட்சி நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...