கோவை: இருகூர், சோமையம்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை

கோவையில் இருகூர் மற்றும் சோமையம்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (செப்டம்பர் 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.


கோவை: கோவையில் இருகூர் மற்றும் சோமையம்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருகூர் துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள பகுதிகளான இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூர், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதேபோல், சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...